தமிழகத்தில் தொலைதூர பேருந்து சேவைகள் – ஜூன் 28 முதல் துவக்கம்?
கொரோனா 2 ஆம் பரவல் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து வரும் ஜூன் 28 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜூன் 28 க்கு மேல் தொலைதூர பேருந்து சேவைகளும் துவங்கும் என கூறப்படுகிறது.
பேருந்து சேவைகள்
தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலையின் பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த அடிப்படையில் நேற்று ஒரு நாளில் மட்டும் புதிதாக 5,755 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தவிர 8,132 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு 150 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையில் கொரோனா 2 ஆம் அலையின் பாதிப்புகள் குறைந்து வருவதன் அடிப்படையில் மாவட்டங்கள் தோறும் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
ஆன்லைனில் இ-பான் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி?
அதன்படி, வரும் 28 ஆம் தேதி முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகளில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் போக்குவரத்து சேவைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மதுரை, விருதுநகர், திருச்சி, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் ஜூன் 28 ஆம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் மாவட்டங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள் இயக்கத்திற்கு கொடுக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து தென் தமிழக மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் தொலைதூர பேருந்து சேவைகளும் 28 ஆம் தேதி முதல் துவங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.