இந்தியாவின் இம்மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி உத்தரவு!
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள பகுதிகளில் நேற்று இரவு 7 மணி முதல் இன்று காலை 6 மணி வரைக்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
ஊரடங்கு:
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் சிவசேனை அமைப்பின் சார்பில் காலிஸ்தான் அணிக்கு எதிரான பேரணி நேற்று நடைபெற்றது. அப்போது காளி மாதா கோயில் அருகே சென்றபோது காலிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை கொண்ட நிஷாங் என்னும் சீக்கிய பிரிவினர்கள் அங்கு வந்து பேரணிக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால் இந்த இரு பிரிவினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்க ஆரம்பித்து விட்டனர்.
மே 2 முதல் 5ம் தேதி வரை பொது விடுமுறை – அரசு அறிவிப்பு!
மேலும், இரு பிரிவினரும் ஒருவர் மீது ஒருவர் கல்வீச்சு நடத்தினர். இதனால் 4 பேர் காயமடைந்துள்ளனர். இந்த கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இதனால் அங்குள்ள பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த பகுதிகளில் பாதுகாப்பு பணிகளுக்காக வெளியூரிலிருந்து போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இருதரப்பினருக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு காவல்துறை இணை ஆணையர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இருதரப்பினருக்கும் இடையே நடத்தப்பட்ட போராட்டம் குறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Exams Daily Mobile App Download
அதாவது பாட்டியாலாவில் நடைபெற்ற இந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டமானது மற்றும் மீண்டும் பழையபடி அமைதி நிலைக்கு திரும்பியுள்ளது. பஞ்சாபின் அமைதியும் நல்லிணக்கமும் தான் மிகவும் முக்கியம் வாய்ந்தவை எனவும் கூறியுள்ளார். மேலும் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவு 7 மணி முதல் இன்று காலை 6 மணி வரையும் கிட்டத்தட்ட பதினோரு மணி நேரம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அவசரகால மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியே செல்லலாம் எனவும் பாட்டியாலா காவல்துறை இணை ஆணையர் சாக்ஸி சாவ்னி அறிவித்துள்ளார்.