கொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஊரடங்கு அமல்? அரசு திடீர் விளக்கம்!
மேற்கு ஐரோப்பியா நாடான ஆஸ்திரியாவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்த அந்நாட்டு பிரதமர் தொற்று பரவல் அதிகரித்தால் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஊரடங்கு:
சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு உஹான் மாநிலத்தில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் சீனாவை தொடர்ந்து அடுத்த நாடுகளுக்கு பரவ தொடங்கியது. அந்த வகையில் அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவியது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி பொதுமக்கள் வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அவ்வப்போது கிருமிநாசினிகளை பயன்படுத்த வேண்டும். தடுப்பூசிகளை செலுத்த வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது.
TNPSC 6000 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – குரூப் 2, 2A விபரங்கள் விரைவில் வெளியீடு!
மற்ற நாடுகளை தொடர்ந்து மேற்கு ஐரோப்பியா நாடான ஆஸ்திரியாவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த அடுத்த கொரோனா அலைகள் அந்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கையை அதிகப்படுத்தியது. தற்போது பரவிய ஒமைக்ரான் பரவல் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அரசின் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் அந்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.
திருப்பதி செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – நாளை முதல் நேரடி முறையில் தரிசன டிக்கெட்டு!
அதனால் ஆஸ்திரியா அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. உணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்து கொண்டு மேற்கண்ட இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனா பரவல் அதிகரித்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும் என்று ஆஸ்திரியா அரசு எச்சரித்துள்ளது. தடுப்பூசி செலுத்தாத மக்கள் விரைந்து செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.