தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? சுகாதாரத்துறை செயலர் பரபரப்பு கடிதம்!

0
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? சுகாதாரத்துறை செயலர் பரபரப்பு கடிதம்!
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? சுகாதாரத்துறை செயலர் பரபரப்பு கடிதம்!
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? சுகாதாரத்துறை செயலர் பரபரப்பு கடிதம்!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தீவிர கண்காணிப்பு தேவை என்றும், மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். மேலும் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். லேசான அறிகுறிகள் இருந்தாலும் மக்கள் பொது நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு அமல்:

உலகம் முழுவதும் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று பொது மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது, இந்த தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டாலும், இவை உருமாற்றம் அடைந்து மக்களை அதிக அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. சில நாடுகளில் கொரோனாவுடன் வாழ பழகி கொண்டுள்ளனர். மேலும் ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், சுவீடன் மற்றும் அமெரிக்கா, கனடா நாடுகளில் கொரோனவை தொடர்ந்து ‘மங்கிபாஸ்’ எனும் குரங்கம்மை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை ஐரோப்பிய நாடுகளில் 80-க்கும் மேற்பட்டவர்களுக்கு குரங்கம்மை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இந்த அப்டேட் செய்வது அவசியம்!

மேலும் இந்தியாவில் நோய் பரவலை தடுக்க விமான நிலையங்கள், முக்கிய துறைமுகங்கள் வழியாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு நோய் பரிசோதனை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தீவிர கண்காணிப்பு தேவை என்றும் கொரோனா பரவாமல் தடுக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

நடவடிக்கை தீவிரமாக இல்லாவிட்டால், தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக கூறியுள்ளார். மேலும் சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை,அண்ணா நகர், பெருங்குடி, கோடம்பாக்கம் மண்டலத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தமிழக மக்களும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு வர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!