தலைநகரில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மீண்டும் அமலாகும் ஊரடங்கு? அரசு ஆலோசனை!
நாட்டின் தலைநகரான டெல்லியில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் பாதிப்பு விகிதம் 7.72 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமலாகுமா என பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.
அதிகரிக்கும் கொரோனா:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருக்கும் பல மாநிலங்கள் படிப்படியாக மீண்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளாக புரட்டி போட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏகப்பட்ட மக்கள் தங்களுடைய நெருங்கிய சொந்தங்களை இழந்து இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனாவின் தாயகமான சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதனால் இந்தியாவில் நான்காம் அலை தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
இந்நிலையில் நாட்டின் தலைநகரான டெல்லியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. நேற்று காலை நிலவரப்படி ஒரே நாளில் 501 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. அதனால் பாதிப்பு விகிதம் 7.72 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் பாதிப்பு விகிதம் இந்த அளவிற்கு அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பு விகிதம் 0,31 சதவீதமாக இருக்கும் நிலையில் டெல்லியில் பாதிப்பு அதிகரிப்பதால் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பள்ளிகள் திறப்பு, வழிபாட்டு தளங்கள் திறப்பு போன்ற தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதே பாதிப்பு அதிகம் ஏற்பட காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது குறித்து டெல்லி அரசு இன்று (ஏப்ரல் 20) ஆலோசனை நடத்த உள்ளது. இந்த ஆலோசனையில் டெல்லியில் மீண்டும் முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டு வரப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வருமா என பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.