தினசரி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
கடந்த சில நாட்களாக ஒடிசா மாநிலத்தில் கொரோனா புதிய பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதால், இரவு ஊரடங்கு உத்தரவை ஒரு மணி நேரம் தளர்த்தி, பள்ளிகளில் சரஸ்வதி பூஜைக்கு அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வு
மாநிலம் முழுவதும் கொரோனா 3ம் அலை பரவல் தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருவதால் தற்போது உள்ள கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, ‘இனி இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் நகர்ப்புறங்களில் இரவு 9 மணிக்கு பதிலாக இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும். கொரோனா நெறிமுறைகளுக்கு இணங்க, பக்தர்கள் அனுமதி இன்று கோயில்களிலும், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்ட பள்ளிகளிலும் சரஸ்வதி பூஜை அனுமதிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 14 வரை பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை – மாநில அரசு முடிவு!
இது தவிர பொதுமக்கள் அதிகம் கூடும் எந்தவொரு சமூக சரஸ்வதி பூஜைகளுக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை. மேலும் மகா சப்தமி அன்று நீராடுவதற்காக ஆற்றங்கரைகள், மலைத் தொடர்கள், குளங்கள் மற்றும் கடற்கரைகளில் பெரிய கூட்டங்களை உருவாக்கும் சபைகள் அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் கடைகள், மால்கள், வணிக வளாகங்கள், சந்தைகள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு வளாகங்கள், தியேட்டர்கள், ஆடிட்டோரியங்கள், சட்டசபை அரங்குகள் அனைத்தும் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு – உணவுத்துறையின் ஷாக் ரிப்போர்ட்!
மேலும், இரவு நேர ஊரடங்கு உத்தரவின் போது உணவகங்கள் மற்றும் ஆன்லைன் மூலம் அவசர வீட்டு விநியோக சேவைகள் தொடரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து மாநில அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்கள், பெருநிறுவனங்கள், சங்கங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் அனைத்து அலுவலகங்களும் கொரோனா நெறிமுறையை கண்டிப்பாக கடைபிடித்து 100% பணியாளர் திறனுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.