தமிழகத்தில் கொரோனா தொற்றால் மீண்டும் ஊரடங்கு? மா.சுப்பிரமணியன் விளக்கம்!

0
தமிழகத்தில் கொரோனா தொற்றால் மீண்டும் ஊரடங்கு? மா.சுப்பிரமணியன் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா தொற்றால் மீண்டும் ஊரடங்கு? மா.சுப்பிரமணியன் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா தொற்றால் மீண்டும் ஊரடங்கு? மா.சுப்பிரமணியன் விளக்கம்!

உலகம் முழுவதும் உருவெடுத்து தீயாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் வேகத்தை குறைக்கும் வகையில் சுகாதாரத்துறை பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு குறித்து மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார் .

கொரோனா ஊரடங்கு:

கடந்த இரண்டு வருட காலமாக சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அதிகளவு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து உயிர் சேதமும் அதிகரித்தது. அதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஊரடங்கை விதித்தும், பொதுமக்கள் வெளி இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், வைரஸ் தொற்றை குறைக்க அதற்கான தடுப்பூசிகளும் கட்டாயமாக்கப்பட்டு நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சரிய தொடங்கியது.

அனைத்து பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – இனி வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை!

இப்படி இருக்கையில் மீண்டும் கொரோனா நான்காம் அலை என்ற பெயரில் விஸ்வரூபம் எடுத்து தீயாக பரவி வருகிறது. குறிப்பாக கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது.அதனால் பல நாடுகளில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தீவிர முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது. அது போல தமிழகத்திலும் குறிப்பாக, தலைநகர் சென்னை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் உருவெடுத்து வருவது நம் நாட்டு மக்களிடையே அதிகளவு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Exams Daily Mobile App Download

இதனால் தமிழக அரசு பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டுமென்றால் முகக்கவசம் கட்டாயம் என்றும், அப்படி விதியை மீறுபவர்களுக்கு 500ருபாய் அபராதம் என்றும் சில கட்டுப்பாடுகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இன்று, தமிழகம் முழுவதும் 1 லட்சம் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனை பார்வையிட்ட சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தற்போது கொரோனா ஊரடங்குக்கு அவசியமில்லை என்றும், தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மிக குறைவு என்றும் பேசியுள்ளார். மேலும், தனியார் மருத்துவமனைகளில் விரைவில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!