தமிழகத்தில் மீண்டும் அமலாகும் ஊரடங்கு? கொரோனா 4வது அலை அச்சம் எதிரொலி!
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது அண்டை மாநிலங்கள் மற்றும் அண்டை நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டு வருகிறது. அதனால் தமிழகத்திலும் 4ம் அலை பரவ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து நிபுணர்கள் சில தகவல்களை தெரிவித்துள்ளனர்.
முழு ஊரடங்கு:
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதன்படி கடந்த 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்பட்டு வருகிறது. தற்போது கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இதற்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதும் முக்கிய காரணமாகும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் குறைந்த பின் தளர்வு அளிப்பது அதன்பின் அடுத்த பரவலை எதிர்கொள்ள மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது.
மாநில அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இதனால் பொதுமக்கள் கொரோனாவின் 4ம் அலை பரவத் தொடங்கினால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தபடுமோ என்ற பயத்தில் உள்ளனர். இந்த நிலையில் ஜூன் மாதத்தில் இந்தியாவில் கொரோனா பரவலின் 4ம் அலை பரவத் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அண்டை நாடுகளிலும் மற்றும் அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த தொற்று அதிகம் பரவியுள்ள நாடுகள் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர்.
இதில் குறிப்பாக அண்டை நாடான சீனாவில் கொரோனா பாதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலின் 4ம் அலை குறித்து ஐஐடியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறியதாவது, இந்தியாவில் கொரோனாவின் நான்காம் அலை ஜூன் மாதத்தில் தொடங்கி ஆகஸ்ட் மாதம் உச்சத்தை தொடும் என்று எச்சரித்துள்ளனர். மேலும் இந்தியாவில் கொரோனாவால் ஏராளமானோர் பாதிப்படைந்து அதன் மூலம் கொரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளனர். அத்துடன் நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசியும் செலுத்தப்பட்டிருப்பதால் 4ம் அலை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறுகிறார்கள்.