இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமல்? வேகமெடுக்கும் கொரோனா தொற்று! பிரதமரின் முடிவு என்ன?
இந்தியாவில் தமிழகம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் தடுப்பு பணியாக மீண்டும் கொரோனா கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊரடங்கு:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா என்னும் கொடிய வகை வைரஸ் தொற்று தீவிரமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மக்கள் மீண்டு வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த தாக்குதலாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வைரஸ் வேகமெடுக்க தொடங்கியது. இந்த வைரஸ் எதிர்பாராத அளவு பாதிப்புகளை அதிகப்படுத்தியது.
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்? அரசின் முடிவு என்ன!
இந்த வைரஸ் தொற்றால் இந்தியாவில் பாதிப்புகளும், உயிரிழப்புகளையும் அதிகரித்தது. ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சமாக உயர்ந்தது. அந்த நேரத்தில் தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தது. இதன் விளைவாக பாதிப்புகள் எண்ணிக்கை குறைந்தது. தற்போது டெல்லி, தமிழகம், மத்திய பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில், கடந்த சில மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 3,377 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
Exams Daily Mobile App Download
இதன் காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மீண்டும் தொடங்கி உள்ளது. நேற்று முன் தினம் 2,927 நேற்று 3,303 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை இன்று 3,377 ஆக அதிகரித்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 60 பேர் உயிரிழந்துள்ளளர். இதனால் பலி எண்ணிக்கை 5,23,753 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் மீண்டும் தடுப்பு பணிகளை வேகமெடுத்துள்ளது. மீண்டும் கொரோனா கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.