அதிகரிக்கும் வன்முறையால் மீண்டும் அமலாகும் ஊரடங்கு உத்தரவு – அரசின் திடீர் முடிவு!
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் சூழ்நிலையால் அங்கு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் பல மடங்கு விலை உயர்வை அடைந்துள்ளது. இதனால் நாடு முழுதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.
மீண்டும் ஊரடங்கு:
கொரோனா தொற்று பரவல் தொடங்கிய 2020ம் ஆண்டு முதல் உலக நாடுகள் பலவற்றிலும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இதனால் அனைத்து தொழில் துறைகளும் மிகவும் மோசமான விளைவுகளை சந்தித்தது. மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானார்கள். அரசும் பணப்பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு முதல் மிக உச்ச நிலையில் இருந்து நோய்த்தொற்று தாக்கம் குறைந்து வந்தது.
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – வீட்டுப்பாடம் கிடையாது!
இதனால் உலக நாடுகள் தொற்று பாதிப்பை பொறுத்து அவ்வப்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கியும், அதிமாகும் சமயத்தில் ஊரடங்கை அறிவித்தும் வருகிறது. இதனால் மெல்ல உலக நாடுகள் அனைத்தும் சீரான பொருளாதார நிலையை அடைந்து வருகின்றனர். ஆனால் முழுக்க சுற்றுலாத் துறையை மையமாக கொண்டு செயல்பட்டு வந்த இலங்கை அரசு கொரோனா பாதிப்பினால் கொடுமையான பொருளாதார நெருக்கடியை அடைந்தது. அன்றாடம் மக்களுக்கு தேவையான அரிசி, பால், முதலான உணவு பொருட்கள் முதல் பெட்ரோல், டீசல் வரை அனைத்து பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரித்தது.
Exams Daily Mobile App Download
இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வந்தனர். நாட்டின் இந்த நிலையை பொறுப்பேற்று முன்னதாக பதவியில் இருந்த ஜனாதிபதியை பதவி விலக கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர் பதவி விலகிய பின்னர் புதிய தலைவர் ஜனாதிபதி பதவியில் பொறுப்பேற்றுள்ளார். ஆனாலும், இலங்கையில் மக்களின் போராட்டம் ஓய்ந்த பாடில்லை. இதனால் அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்களை தடுக்கும் நோக்கத்தில் இலங்கையில் இன்று இரவு 8 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்த இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.