பிப்ரவரி 15 முதல் ஊரடங்கு உத்தரவு முழுவதுமாக நீக்கம் – மாநில அரசு அறிவிப்பு!
அசாம் மாநிலத்தில் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் எவ்விதமான ஊரடங்கு உத்தரவும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் திரும்ப பெறுவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ஊரடங்கு நீக்கம்
மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸின் புதிய பாதிப்புகள் குறைந்து வருவதை அடுத்து, முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான அசாம் அரசாங்கம் இரவு ஊரடங்கு உத்தரவை பிப்ரவரி 15 முதல் நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் அளித்துள்ளது. இது தொடர்பாக இன்று (பிப்.7) செய்தியாளர் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், இந்த மாதம் முதல் அனைத்து கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
PF அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு – மீண்டும் கோவிட்-19 அட்வான்ஸ்! அரசு அனுமதி அளிக்குமா?
அதாவது, பிப்ரவரி 15 முதல் அசாமில் எந்த ஊரடங்கு உத்தரவும் இருக்காது என்றும் அனைத்து கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளும் இதன் மூலம் திரும்பப் பெறப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர அசாம் மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புத் தேர்வுகளில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களும் கட்டாயமாக கொரோனா தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளுமாறு முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவுறுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘பிப்ரவரி 15 முதல் அசாமில் எந்த ஊரடங்கு உத்தரவும் இருக்காது.
மீண்டும் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு அமல் – பாதிக்கப்படும் பொருளாதாரம்! அச்சத்தில் தொழிலாளர்கள்!
அதே போல அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் இதன் மூலம் திரும்பப் பெறப்படுகின்றன. மேலும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் கொரோனா தடுப்பூசிகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் அசாம் மாநிலம், குவஹாத்தி முனிசிபல் கார்ப்பரேஷன் மற்றும் கர்பி அங்லாங் பகுதியில் தன்னாட்சி கவுன்சில் தேர்தல்கள், மாநிலத்தில் உள்ள மற்ற மாநகராட்சி வாரியத் தேர்தல்களுடன் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.