பிப்ரவரி 20 வரை மீண்டும் இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா தாக்கம் மின்னல் வேகத்தில் பரவி வருவதால் திரிபுரா அரசு இன்று முதல் இரவு ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது.மேலும் மாநில அரசு புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய வழிகாட்டு முறைகள்:
இந்தியா முழுவதும் கொரோனா மற்றும் உருமாறிய வைரஸ் ஓமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களில் தடுப்பு விதிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டது. இருப்பினும் ஒரு சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டு கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 71,365 புதிய COVID-19 நோய் பாதிப்பு பதிவாகியுள்ளன என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது
இந்த வகையில் திரிபுரா அரசு புதன்கிழமை அன்று, கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் பொது மக்கள் (50 சதவீத திறன் வரை) மூடிய இடங்களில் அனுமதிக்கப்படுகிறார்கள். திரிபுரா மாநிலத்தில் கோவிட்-19 பரவுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் இன்று முதல் 20 வரை இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவை திரிபுரா அரசு விதித்துள்ளது. மேலும் திரையரங்குகள் மற்றும் ஜிம்கள் 50 சதவீத திறனுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
Airtel, Jio, VI பயனர்கள் கவனத்திற்கு – ரூ.499க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விபரம் இதோ!
இதனை தொடர்ந்து 50 சதவீதத்துடன் இரவு 10 மணி வரை உணவகங்கள் திறக்க அனுமதிக்கப்படும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரசு மற்றும் அரசு சாரா அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்கள் வருகையுடன் செயல்படும். கொரோனா தடுப்பு வழிமுறைகளை அனைத்து வகை அதிகாரிகளும் ஊழியர்களும் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த வகையில் அடிக்கடி கைகளை கழுவுதல், சுத்தப்படுத்துதல், மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை எல்லா நேரங்களிலும் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.