ஊடரங்கு தளர்வுகளை ரத்து செய்ய வேண்டும் – மருத்துவர் சங்கத்தினர் அறிக்கை!!

0
ஊடரங்கு தளர்வுகளை ரத்து செய்ய வேண்டும் - மருத்துவர் சங்கத்தினர் அறிக்கை!!
ஊடரங்கு தளர்வுகளை ரத்து செய்ய வேண்டும் - மருத்துவர் சங்கத்தினர் அறிக்கை!!

ஊடரங்கு தளர்வுகளை ரத்து செய்ய வேண்டும் – மருத்துவர் சங்கத்தினர் அறிக்கை!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஜூலை 21 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை காரணமாக கேரளாவில் பல தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர் சங்கத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஊரடங்கு தளர்வுகள்:

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனை சரி செய்ய பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன் காரணமாக கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் பல மாநிலங்களில் தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் முதலில் ஏற்பட்ட கேரளா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் டெல்டா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இதனால் அந்த மாநிலம் முழுவதும் பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஜூலை 21 ஆம் தேதி இஸ்லாமியர் பண்டிகையான பக்ரீத் பாண்டிகை காரணமாக கேரளா மாநிலத்தில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில் இந்த அறிவிப்பு குறித்து மருத்துவர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

டெல்டா வைரஸ் பரவல் எதிரொலி – பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்!

அதன்படி, கொரோனா பரவல் அதிகரிப்பு உள்ள நிலையில் கேரளா அரசு தளர்வுகள் வழங்கியிருப்பது வேதனை அளிக்கிறது. காஷ்மீர், உத்தர பிரதேஷ், உத்தராகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்கள் பொது பாதுகாப்பு என்ற உணர்வுடன் பாரம்பரியமான யாத்திரைகளை ரத்து செய்துள்ளது. கல்வி அறிவு அதிகம் பெற்ற கேரளா பிற்போக்கு முடிவு எடுத்தது துரதிர்ஷ்டவசமானது. இந்த உத்தரவை வாபஸ் பெறாவிட்டால் அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக கன்வர் யாத்திரையை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதே போல கேரளாவில் பக்ரீத் பண்டிகை காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகளை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் சுப்ரீம் கோர்ட் சென்று வழக்கு பதிவு செய்யப்படும். அது அரசுக்கு எதிராக மட்டுமே தீர்ப்பு கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!