ஜூன் 21ம் தேதி முதல் 16 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் – மாநில அரசு அறிவிப்பு!
கர்நாடகா மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வந்ததன் காரணமாக மாநில அரசு குறிப்பிட்ட 16 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அளித்து உத்தரவிட்டுள்ளது. இவை அனைத்தும் நாளை (ஜூன் 21) முதல் அமலுக்கு வரவுள்ளது.
கூடுதல் தளர்வுகள்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரம் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. இதை அடுத்து கர்நாடகா மாநிலத்தில் மக்களை பாதுகாக்கும் வகையில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மக்கள் அனைவரும் முறையாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்றிய காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வந்தது. இதன் காரணமாக பாதிப்புகள் குறைவாக காணப்படும் மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூன் 28 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு? இன்று தளர்வுகள் அறிவிப்பு!
அந்த வகையில் கர்நாடகா மாநிலத்தில் பாதிப்பு குறைவாக காணப்படும் 16 மாவட்டங்களில் நாளை (ஜூன் 21) முதல் கூடுதல் தளர்வுகள் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. அதன்படி காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து மற்றும் மெட்ரோ போக்குவரத்து 16 மாவட்டங்களில் 50 சதவிகித பயணிகளுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு ரத்து, ஜூலை 1 முதல் பள்ளி & கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
அதேபோல் ஹோட்டல், உடற்பயிற்சி கூடங்கள் அனைத்தும் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் குளிர்சாதன வசதி இன்றி மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இரவு நேர ஊரடங்கு இரவு 7 மணி முதல் காலை 5 மணி வரையிலும் மற்றும் வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் திங்கள்கிழமை காலை 5 மணி வரை தொடர்ந்து நீடிக்கும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.