கொரோனா காலத்தில் ரூ.11,000 கோடி கல்விக்கடன் – ஆய்வு முடிவுகள் வெளியீடு!!
கொரோனா நோய்த்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கின் போது அதிக அளவிலான மக்கள் கல்விக்கடனை வாங்கியுள்ளனர் என்று CRIF ஹைய் ரேங்க் அமைப்பு அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு:
கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் உலகின் ஒரு மூலையில் தொடங்கிய கோவிட் -19 தொற்று ஒரு சில மாதங்களிலேயே உலகின் அனைத்து பகுதிக்கும் பரவத் தொடங்கியது. தொடர்ந்து நோயின் தாக்கம் அதிகரித்து வந்த காரணததால் உலகம் முழுவதும் உள்ள நாடுகள் அனைத்தும் ஊரடங்கு முறையை அமல்படுத்தியது. இதனால் உலகின் பொருளாதாரம் பெரிதும் பாதித்தது.
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு – கலந்தாய்வு அறிவிப்பு!!
பொருளாதார நிலை:
ஊரடங்கின் காரணமாக நாட்டின் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், சிறுகுறு வணிகங்கள் போன்ற தொழில்துறை சார்ந்த அனைத்து நிறுவனங்களும் ஸ்தம்பித்து விட்டது. இதனால் நாட்டின் பொருளாதாரம் மட்டுமல்லாது, சாதாரண மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது பள்ளிகள் மூடப்பட்டிருந்த காரணத்தால் ஆன்லைன் முறையில் மட்டுமே பாடங்கள் அனைத்தும் நடத்தப்பட்டது.
கல்விக்கடன்:
கடந்த 2020ம் ஆண்டில் வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் சுமார் ரூ.11,000 கோடி ருபாய் அளவிலான கல்விக்கடனை வழங்கியுள்ளது. மேலும், 2020 மார்ச் முதல் அக்டோபர் வரையிலான ஊரடங்கு காலத்தில் தான் கல்விக்கடனில் பெரும்பகுதி வழங்கப்பட்டுள்ளது என்று CRIF ஹைய் ரேங்க் அமைப்பு அறிவித்துள்ளது. மேலும், 2020 அக்டோபர் மாத முடிவின் படி சுமார் ஒரு லட்சம் கோடி அளவிலான கடன் தொகை நிலுவையில் உள்ளது எனவும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்