ஜூலை 3 வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல் – வன்முறை எதிரொலி!
உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற வன்முறையைத் தொடர்ந்து, பரேலியில் ஜூலை 3ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
முழு ஊரடங்கு:
வரும் ஜூன் 10 ஆம் தேதியன்று, முஸ்லிம் மதகுரு தௌகிர் ராசா அறிவித்த போராட்டத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரேலியில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற வன்முறையைத் தொடர்ந்து பரேலி நிர்வாகம் 144வது பிரிவின் கீழ் தற்போது ஊரடங்குச் சட்டத்தை விதித்துள்ளது. அந்த வகையில் பரேலியில் ஜூலை 3ம் தேதி வரை இந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.
TN TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – பாடத்திட்டம் குறித்த முழு விபரங்கள் இதோ!
இந்த ஊரடங்கு அறிவிப்பு, முஸ்லீம் மதகுரு தௌகிர் ராசா அறிவித்தபடி ஜூன் 10 ஆம் தேதியன்று நடைபெறும் மாபெரும் போராட்டத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்த நிர்வாகத்தின் அறிவிப்பின் படி, ஐந்து நபர்களுக்கு மேல் பொது இடங்களில் கூடக் கூடாது என்றும் இந்த காலகட்டத்தில் போராட்டங்களும் தடை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கான்பூர் பகுதியில் சந்தை நிறுத்தம் தொடர்பாக பல்வேறு சமூகங்களை சேர்ந்த இரு குழுக்களிடையே வன்முறை மோதல் வெடித்தது.
Exams Daily Mobile App Download
இதை தொடர்ந்து கான்பூரில் உள்ள யதீம் கானா மற்றும் பரேட் கிராஸ்ரோட்ஸ் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த மோதலில் இரண்டு பேர் உட்பட போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்தனர். மேலும், கான்பூரில் நேற்று வெடித்த வன்முறை தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இப்போது இந்த வன்முறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூலை 3 வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.