மேலும் 15 நாட்களுக்கு இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று நிலவரத்தை கருத்தில் கொண்டு மணிப்பூர் மாநில அரசு மேலும் 15 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இருப்பினும் சில கூடுதல் நேர தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
மணிப்பூர் அரசு, கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு மாநிலத்தில் விதிக்கப்பட்ட இரவு ஊரடங்கு உத்தரவை இன்று முதல் மேலும் பதினைந்து நாட்கள் நீட்டித்துள்ளது. மேலும் சில தளர்வுகளையும் வழங்கியுள்ளது. மாநிலத்தில் கொரோனா நிலைமை மேம்பட்டதால், இரவு ஊரடங்கு உத்தரவின் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி மாலை 7 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும். மாநில மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களின் நேரடி வருகையை மாநில அரசு அனுமதித்துள்ளது.
OLA S1 Electric Scooter அக்டோபர் முதல் விற்பனை – EMI, வாகன காப்பீடுகள் விளக்கம்!
வங்கிகள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை பொது பரிவர்த்தனைகளை நடத்த அனுமதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் தபால் சேவை மற்றும் காப்பீட்டு நிறுவனங்களும் கொடுக்கப்பட்ட நேரத்தில் அனைத்து வேலை நாட்களிலும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. புதிய வழிகாட்டுதலின்படி, தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை காய்கறி கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுமானப் பொருட்களை விற்கும் கடைகளின் நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆப்கனில் தாலிபான்களின் புதிய அரசு அமைப்பு – அதிபர் & அமைச்சரவை அறிவிப்பு!
இதற்கிடையில் புதிதாக கொரோனாவால் 282 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில் 294 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் மீட்பு விகிதம் 95.71 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.