அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மே 10ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் – மாநில முதல்வர் அறிவிப்பு!!
இமாசலபிரதேசத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் மே 10ம் தேதி வரை கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட வேண்டும் என்று மாநில முதல்வர் ஜெய் ராம் தாகூர் அறிவித்துள்ளார்.
கல்வி நிறுவனங்கள் மூடல்:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிக அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவிற்கு உள்ளது. இதனால் மத்திய அரசு, மாநிலங்களில் உள்ள தொற்று பாதிப்பு நிலையைப் பொறுத்து கட்டுப்பாடுகளை விதிக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், பல மாநிலங்களிலும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
1272 ஆசிரியரல்லா பணியாளர்களுக்கான ஏப்ரல் மாத ஊதிய கொடுப்பாணை – பள்ளிக்கல்வி இயக்குனர் கோரிக்கை!!
ஹிமாச்சலப்பிரதேசத்தில் கொரோனா தொற்று காரணமாக வரும் மே 10ம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட வேண்டும் என்று முதல்வர் ஜெய் ராம் தாகூர் அறிவித்துள்ளார். முன்னதாக ஏப்ரல் 21ம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் மூட உத்தரவிட்டிருந்தது. தற்போது கோவிட் நிலைமை கைமீறி உள்ளதால் மீண்டும் கல்வி நிறுவனங்கள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும், மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள், பயிற்சி மையங்கள் போன்றவை அனைத்தும் அரசு வழங்கியுள்ள நிலையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வகுப்புகளை தொடரலாம். மேலும், கல்வி நிலையங்களுக்குள் கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத அனைத்து ஊழியர்களுக்கும் அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.