டிச.25ம் தேதியன்று முழு ஊரடங்கு அமல்? இன்று அறிவிப்புகள் வெளியீடு!
தற்போது கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாடு பரவல் குறித்த அச்சங்களுக்கு மத்தியில் நெதர்லாந்து நாட்டில் அத்தியாவசிய சேவைகளை தவிர மற்ற அனைத்து சேவைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்
உலகநாடுகள் தோறும் புதிய தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு நாடுகளில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நெதர்லாந்து நாட்டில், தொடர்ச்சியாக அதிகரித்து வரும் ஒமிக்ரான் மாறுபாடு பரவல் காரணமாக அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற அனைத்து சேவைகளையும் மூடுவது குறித்து அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – அறங்காவலர் குழு தலைவர் முக்கிய அறிவிப்பு!
தவிர கண்டிப்பான முறையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும், இது தொடர்பான அறிவிப்பு இன்று (டிச.18) வெளியாகும் என்றும் சில செய்தி அறிக்கைகள் தகவல் அளித்துள்ளன. இதற்கிடையில் நெதர்லாந்து நாட்டில் உள்ள அனைத்து அத்தியாவசியமற்ற கடைகள், பள்ளிகள், பார்கள், உணவகங்கள் மற்றும் பிற பொது இடங்களை மூடும்படிக்கு சுகாதார நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. அந்த வகையில் புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று இரவு 7 மணிக்கு நடைபெற இருக்கிறது.
டிசம்பர் 20 முதல் ஜனவரி 7 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை – கல்வித்துறை உத்தரவு!
என்றாலும், நவம்பர் மாதத்தின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளின் படி, பார்கள், உணவகங்கள் மற்றும் பெரும்பாலான கடைகள் ஜன. 14ம் தேதி வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது, வரவிருக்கும் ஜனவரி மாதத்திற்குள் நெதர்லாந்தில் ஒமிக்ரான் ஆதிக்கம் செலுத்தும் என்று பிரதமர் மார்க் ரூட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், தேசிய பொது சுகாதார நிறுவனம் (RIVM) வெளியிட்டுள்ள மிக சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி ஒமிக்ரான் மாறுபாட்டால் சுமார் 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.