இந்தியாவில் 150 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு? மத்திய அரசு அறிவுறுத்தல் !!
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் 10 சதவீதத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு அவசியம் இல்லை என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியுள்ளது.
முழு ஊரடங்கு
இந்தியாவில் கொரோனா அதிகமுள்ள பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளுடன் பிரதமர் மோடி சில நாட்களாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அந்த ஆலோசனை கூட்டத்தில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 10 சதவீதத்துக்கும் மேலாக உள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு தேவையில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக மாநிலங்கள் தோறும் கொரோனா அதிகமுள்ள 150 மாவட்டங்களில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தலாம் என மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியானது.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – CEO வெளியீடு!
அதன்படி கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களின் பட்டியலில் தமிழகத்தின் 6 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளது. அந்த மாவட்டங்களில் கொரோனா புதிய பாதிப்பை கட்டுப்படுத்தினால் இரண்டாம் அலையை தடுத்து விடலாம் என மத்திய அரசு கருதுகிறது. இந்நிலையில் மாவட்டங்கள் தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்த முடியாத பட்சத்தில் முன்பு இருந்தது போல கொரோனா பாதித்துள்ள மாவட்டங்களை பச்சை, சிவப்பு, மஞ்சள் என 3 மண்டலங்களாக பிரித்து அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிடுவதாக தெரிகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி முழு ஊரடங்கை அமல்படுத்தாமல் கூடுதலாக கட்டுப்பாடுகளை அறிவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள், மார்க்கெட், அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் போன்ற இடங்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மே 31ஆம் தேதி வரை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தவிர கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.