ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – அருணாசலப்பிரதேச அரசு உத்தரவு!
அருணாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ள இட்நகர் பகுதியில் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
நாடு முழுவதும் கொரோனா 2ம் அலையின் பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், ஒரு சில மாநிலங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் மாநில அரசு தீவிர கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதேபோல், அருணாசலப் பிரதேசத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மாநில சுகாதாரத்துறையின் அறிக்கையில் தெரிகிறது. ஞாயிறு அறிக்கையின் படி, 161 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 17 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
இதனால் மாநிலத்தில் மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 51,300 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிய இறப்புகள் எதுவும் பதிவாகாததால், மாநிலத்தில் தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 252 ஆக உள்ளது என்று மாநில கண்காணிப்பு அதிகாரி டாக்டர் லோப்சாங் ஜம்பா தெரிவித்துள்ளார். மாநிலத்தில் மூலதன வளாகப் பகுதியில் 54, லெபாரடா (23), சாங்லாங் (12), கிழக்கு சியாங் மற்றும் லோயர் திபாங் பள்ளத்தாக்கு தலா 9 பேருக்கும் மேல் சியாங் (8) மற்றும் தலா பகுதியில் 6 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும், அருணாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ள மேற்கு காமெங், லோயர் சுபன்சிரி, அஞ்சாவ், பாம்பும்பரே, லோஹித், மேல் சுபன்சிரி, ஷி-யோமி, நம்சாய், கிழக்கு காமெங், லோயர் சியாங், பக்கே கெசாங், டிராப் மற்றும் மேற்கு சியாங் மாவட்டங்களில் இருந்தும் புதிய தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இட்நகரில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் சில தளர்வுகளுடன் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.