ஜனவரி 2ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – ஓமைக்ரான் பரவல் எதிரொலி!

0
ஜனவரி 2ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு - ஓமைக்ரான் பரவல் எதிரொலி!
ஜனவரி 2ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு - ஓமைக்ரான் பரவல் எதிரொலி!
ஜனவரி 2ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – ஓமைக்ரான் பரவல் எதிரொலி!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஜனவரி 2, 2022 வரை கொரோனா பரவல் தொற்று அச்சம் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மைக் குழுவின் மாநில செயற்குழு (SEC) அறிவுறுத்தலின் படி ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தற்போதைய நிலவரப்படி புதிதாக கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றாலும், வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே நேற்றைய நள்ளிரவு முதல் ஜனவரி வரை புதுவையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பேரிடர் மேலாண்மை குழுவின் மாநில செயற்குழு தெரிவித்துள்ளது. மேலும் புதிதாக மாற்றமடைந்த ஓமைக்ரான் தொற்று அண்டை மாநிலங்களில் பரவி வருவதால் மேலும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சமயங்களில் நோய் பரவல் பாதிப்பு ஏற்படுவதை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வாரத்தில் 4 நாட்கள் வேலையுடன் கூடிய தொழிலாளர் குறியீடு | புதிய நிதியாண்டில் அமல்?

இதனால் புதுவையில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும். இருப்பினும், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு (டிசம்பர் 24) மற்றும் கிறிஸ்துமஸ் தினத்தில் (டிசம்பர் 25) இரவு நேர ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆம் தேதி அதிகாலை 2 மணி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என்று பேரிடர் மேலாண்மைக் குழுவின் மாநில செயற்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நாட்களில் அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமலில் இருக்கும். சமூக பொழுதுபோக்கு தொடர்பான கூட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது.

ஆனால் டிசம்பர் 24, டிசம்பர் 30 மற்றும் 31 மற்றும் புத்தாண்டு தினத்தில் (ஜனவரி 1) கோவிட் நோய் தடுப்பு நடைமுறைகளுடன் பின்பற்றப்படுவதற்கு அனுமதிக்கப்படும். உணவகங்கள், ஹோட்டல்கள், பார்கள் மற்றும் மதுபான கடைகள் மற்றும் விருந்தோம்பல் துறை நிறுவனங்கள் ஆகியவை கோவிட் நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட அனுமதிக்கப்படும். உரிமம் வழங்கும் ஆணையத்தின் முன் அனுமதியுடன், புத்தாண்டை முன்னிட்டு உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் வழக்கமான நேரத்தைத் தாண்டி செயல்பட முடியும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசில் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் – உடனடியாக நிரப்ப கோரிக்கை!

மத ஸ்தலங்கள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்கள் பொது மக்கள் பிரார்த்தனைக்காக தினமும் இரவு 10 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படும். இருப்பினும், தேவாலயங்கள் இரவு 10 மணிக்குப் பிறகும் டிசம்பர் 24, 25ம் தேதிகளில் பொது பிரார்த்தனைக்காக திறக்க அனுமதிக்கப்படும். டிசம்பர் 31 ம் தேதி இரவு 10 மணிக்குப் பிறகு அனைத்து வழிபாட்டுத் தலங்களும் தொழுகைக்காக திறக்க அனுமதிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 நபர்களுடன் மத நிறுவனங்களில் திருமண கொண்டாட்டம் அனுமதிக்கப்படும். விருந்தினர்களின் எண்ணிக்கை 100க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு திருமணங்களில் நபர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும். இறுதிச் சடங்கில் இறுதி அஞ்சலி செலுத்த வருவோரின் எண்ணிக்கையும் 20க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!