பிப்ரவரி 10 வரை ஊரடங்கு, இரவு 7 மணி வரை கடைகளை திறக்க அனுமதி – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

0
பிப்ரவரி 10 வரை ஊரடங்கு, இரவு 7 மணி வரை கடைகளை திறக்க அனுமதி - புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
பிப்ரவரி 10 வரை ஊரடங்கு, இரவு 7 மணி வரை கடைகளை திறக்க அனுமதி - புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
பிப்ரவரி 10 வரை ஊரடங்கு, இரவு 7 மணி வரை கடைகளை திறக்க அனுமதி – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

தற்போது ஹரியானா மாநில அரசாங்கம் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை பிப்ரவரி 10 வரை நீட்டித்துள்ள நிலையில், வணிக வளாகங்கள் மற்றும் சந்தைகள் அனைத்தும் காலை 7 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி கொடுத்துள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் கொரோனா நோய் தொற்று பரவலானது ஒரு சில மாநிலங்களில் அதிகளவு பாதிப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. என்றாலும் மஹாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் உச்சமடைந்து, மீண்டுமாக சரியத் துவங்கி இருக்கிறது. இதன் மூலம் ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து இம்மாநில அரசுகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – புதிய பாடத்திட்டம் வெளியீடு!

இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் தற்போதுள்ள நோய் தொற்று நிலைமையை ஆய்வு செய்த அரசு கொரோனா தடுப்பு தொடர்பான கட்டுப்பாடுகளை பிப்ரவரி 10 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஹரியானா மாநிலத்தின் தலைமைச் செயலாளர் சஞ்சீவ் கௌஷால் பிறப்பித்துள்ள புதிய உத்தரவில், ‘மாநிலம் முழுவதும் ஊரடங்கு தடைகள் நீட்டிக்கப்பட்ட நிலையில், வணிக வளாகங்கள் மற்றும் சந்தைகள் இரவு 7 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் மட்டுமே கட்டுப்பாடுகள் இல்லாமல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது மக்களின் வசதிக்காக இந்த செயல்பாடுகளுக்கான நேரம் தளர்த்தப்பட்டிருந்தாலும், தொற்று பரவுவதை தடுக்க அவர்கள் கண்டிப்பாக கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஹரியானா மாநில அரசாங்கம் விதித்துள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களின் படி,

  • மால்கள் மற்றும் சந்தைகள் இரவு 7 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகிறது.
  • பால் மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் உள்ள கடைகள் எப்போதும் திறந்திருக்கலாம்.
  • திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
  • அனைத்து விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் மைதானங்கள் மூடப்பட்டிருக்கும்.
  • இருப்பினும், விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக அல்லது தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளுக்காக பயன்படுத்தப்படும் வளாகங்கள் திறக்கப்படலாம்.
  • இறுதி சடங்குகளில் 50 பேர் கூடுவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • அதே போல திருமணங்களில் 100 பேர் மட்டும் கலந்து கொள்ள முடியும்.
  • இரவு ஊரடங்குச் சட்டம் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும்.
  • அனைத்து பார்கள் மற்றும் உணவகங்கள் 50 சதவீத திறனில் மட்டுமே செயல்பட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!