மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல் – அரசின் அதிரடி உத்தரவு!
ஆந்திராவில் கோனசீமா மாவட்டத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்ட எதிர்ப்பு தெரிவித்து கடும் போராட்டம் நடைபெற்றது. அங்கு 2,000 க்கும் மேற்பட்ட காவலர்களுடன், சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த ஒரு கனத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதையடுத்து அமலாபுரம் நகரில் ஒரு அமைதியற்ற சூழ்நிலை உருவாகி உள்ளது.
ஊரடங்கு உத்தரவு
ஆந்திராவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மக்களவை தொகுதிகளின் அடிப்படையில் 13 ஆக இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை 26 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோனசீமா என்ற புதிய மாவட்டம் உருவானது. இதற்கு அமலாபுரம் மாவட்ட தலைநகராக அறிவிக்கப்பட்டது.மேலும் 2 மாதங்கள் கழித்து இந்த மாவட்டத்துக்கு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் என பெயர் சூட்ட அரசு பரிசீலனை செய்வதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மக்கள் தங்களது கருத்தை தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.
தேனி மாவட்டத்தில் மே 28ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இதனால், மிகவும் அமைதியான மாவட்டம் என பெயர் எடுத்திருந்த அமலாபுரத்தில் திடீரென புரட்சி வெடித்தது. அம்பேத்கர் பெயர் சூட்ட அப்பகுதியினரும் எதிர்க்கட்சியினரும் ஆட்சேபம் தெரிவித்தனர். இது தொடர்பாக நேற்று முன்தினம் அமலாபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க சில அமைப்பினர் ஊர்வலமாக சென்றனர். அம்பேத்கரின் பெயரை சூட்டக்கூடாது என்பது இவர்களின் வாதமாகும். இதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், திடீரென இந்த கண்டன ஊர்வலம் போராட்டக் களமாக மாறியது. இதனால், போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர்.
Exams Daily Mobile App Download
இந்த சமயத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசினர். இதைத்தொடர்ந்து போலீசார் 5 ரவுண்டு துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதனிடையே, ஆந்திர அமைச்சர் விஸ்வரூப் மற்றும் மும்மிடிவரம் எம்.எல்.ஏ. சதீஷ்குமார் வீடுகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் வீட்டில் இருந்தவர்கள் கார்களில் தப்பி உயிர் பிழைத்தனர். இது தொடர்பாக சுமார் 130 பேர் மீது அமலாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் 46 பேரை கைது செய்தனர். மற்றவர்களை தேடும் பணியில் 10 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தற்போது கோனசீமா மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது.