ஊரடங்கை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கலாம் – மத்திய அரசு பரிசீலனை..!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இந்நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸினால் இதுவரை 5000கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் வைரஸின் தாக்கமும் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதனால் மத்திய அரசு ஊரடங்கை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அதனை உறுதிப்படுத்தும் விதமாக, அத்யாவசியப் பொருட்கள் கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ் அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்