இன்று முதல் ஜனவரி 14 வரை முழு ஊரடங்கு, பள்ளிகளுக்கு விடுமுறை – பிரதமர் அறிவிப்பு!

0
இன்று முதல் ஜனவரி 14 வரை முழு ஊரடங்கு, பள்ளிகளுக்கு விடுமுறை - பிரதமர் அறிவிப்பு!
இன்று முதல் ஜனவரி 14 வரை முழு ஊரடங்கு, பள்ளிகளுக்கு விடுமுறை - பிரதமர் அறிவிப்பு!
இன்று முதல் ஜனவரி 14 வரை முழு ஊரடங்கு, பள்ளிகளுக்கு விடுமுறை – பிரதமர் அறிவிப்பு!

கொரோனா நோய்த்தொற்று பரவலின் மாறுபாடான ஓமைக்ரான் பாதிப்பு தீவிரமெடுத்து வரும் நிலையில், பண்டிகை தினங்களை கருத்தில் கொண்டு இன்று முதல் வருகிற ஜனவரி 14ம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக பிரதமர் அவர்கள் அறிவித்து உள்ளார்.

ஊரடங்கு அமல்:

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமெடுத்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டது. பின்னர் தடுப்பு நடவடிக்கைகளாலும், கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டாலும் தொற்று பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட்டது. இந்த நிலையில் கொரோனாவில் இருந்து மாறுபாடு அடைந்த டெல்டா வகை 2வது அலை பரவலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தற்போது இதை விட அதிக வீரியம் மற்றும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய தன்மை கொண்ட ஓமைக்ரான் மாறுபாடு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்த தொடங்கி உள்ளது. இது ஐரோப்பிய நாடுகளில் தற்போது தீவிரமெடுத்து பரவி வருகிறது.

TNPSC குரூப் 2, 2A தேர்வில் 5831 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு – பதவிகள், கல்வித்தகுதி!

இந்தியாவிலும் 100க்கும் மேற்பட்டோர் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் 3வது அலை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். எனவே கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெதர்லாந்து பிரதமர் அவர்கள் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளார். அதன்படி இன்று முதல் ஜனவரி 14ம் தேதி வரை அமலாகும் புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டின் பிரதமர் மார்க் ரூட்டே வெளியிட்டுள்ளார். தற்போது அந்நாட்டில் ஓமைக்ரான் தொற்று வேகமெடுத்து உள்ளதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியில் 1000+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க டிச.29ம் தேதி கடைசி நாள்!

அதன்படி இன்று முதல் ஜனவரி 14ம் தேதி வரை பார்கள், திரையரங்குகள், அருங்காட்சியகங்கள், அத்தியாவசியமற்ற கடைகள், ஹோட்டல்கள் என அனைத்தும் மூடப்படும் என பிரதமரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கிறிஸ்துமஸ் தினம் வர உள்ளதால் அன்றைய நாளை தவிர பிற தினங்களில் வீட்டில் உறவினர்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் பள்ளிகளும் ஜனவரி 9ம் தேதி வரை மூடப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!