மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம்? முதல்வர் முக்கிய தகவல்!
தற்போது அமலில் இருந்து வரும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு, நிபுணர் குழுவின் அறிக்கையை பெற்ற பிறகு மூன்று அல்லது நான்கு நாட்களில் கூட்டம் நடத்தப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று முதல்வர் தகவல் அளித்துள்ளார்.
ஊரடங்கு நீக்கம்
நாடு முழுவதும் தற்போது பல்வேறு மாநிலங்களில் கொரோனா 3ம் அலைத்தொற்று பாதிப்பானது வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனை கவனத்தில் கொண்டு டெல்லி,மஹாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது நிபுணர்கள் குழுவின் அறிக்கையைப் பெற்ற பிறகு, கொரோனா வைரஸ் நிலைமையை விரைவில் மதிப்பாய்வு செய்து, நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து கர்நாடக அரசு முடிவெடுக்கும் என்று மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார்.
இதற்கு முன்னதாக கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை பதவியேற்று 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை செய்த சாதனைகள் குறித்த புத்தகத்தை வெளியிடுவது தொடர்பான கூட்டத்தில் அவர் இந்த தகவலை அளித்துள்ளார். இப்போது வரவிருக்கும் நாட்களில் கொரோனா தொற்றின் நிலைமையை நிர்வகிப்பது, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு மாநிலங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அரசு ஆலோசித்து, அறிக்கை ஒன்றை நிபுணர்கள் குழுவுக்கு அனுப்பியுள்ளது.
மதுரையில் நாளை (ஜன.29) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இப்போது நிபுணர்கள் குழுவின் மறுஅறிக்கை கிடைத்ததும், மூன்று அல்லது நான்கு நாட்களில் கூட்டம் நடத்தப்பட்டு ஊரடங்கு தளர்வு தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். முன்னதாக கர்நாடகாவில் கொரோனா வழக்குகளின் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு கடந்த வாரத்தில் விதிக்கப்பட்ட வார இறுதி ஊரடங்கு உத்தரவை நீக்கிய அரசாங்கம், தினமும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. அதே நேரத்தில் 50 % திறனுடன் சினிமா அரங்குகள், பப்கள், கிளப்புகள், உணவகங்கள், பார்கள், ஹோட்டல்கள் ஆகியவற்றுக்கு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.