ஜூன் 7க்கு பின் முழு ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பு – மாநில அரசிடம் ஆலோசனை!!

0
ஜூன் 7க்கு பின் முழு ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பு - மாநில அரசிடம் ஆலோசனை!!
ஜூன் 7க்கு பின் முழு ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பு - மாநில அரசிடம் ஆலோசனை!!
ஜூன் 7க்கு பின் முழு ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பு – மாநில அரசிடம் ஆலோசனை!!

கர்நாடகாவில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஜூன் 7 ஆம் தேதிக்கு மேல் முழு ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என வல்லுனர் குழு ஆலோசனை வழங்கியுள்ளது.

முழு ஊரடங்கு நீட்டிப்பு:

கர்நாடகாவில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை தடுக்க மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேலும் ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே மாதத்தில் இந்த கட்டுப்பாடுகள் இரு முறை நீடிக்கப்பட்டு ஜூன் மாதம் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 1,32,788 பேருக்கு கொரோனா – 3,207 பேர் உயிரிழப்பு!

இந்நிலையில் ஜூன் மாதத்திற்கு பின்னர் இந்த கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என அம்மாநில முதல்வர் அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார். இது குறித்து வல்லுநர்கள் உள்பட பல தரப்பினரிடையே கருத்துகளை அரசு சேகரித்து வருகிறது. அதனை பரிசீலித்த பின் முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். ஆனால் அரசின் ஆலோசனை முழு ஊரடங்கை நீடிக்க வேண்டும் என பரிந்துரைகள் வழங்கியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இது குறித்து அந்த குழு தலைவர் எம்.கே.சுதர்சன் கூறுகையில், வாழ்வாதாரத்தை விட வாழ்க்கை முக்கியம் என்பதால் இந்த பரிந்துரையை கர்நாடக அரசிடம் வழங்கி உள்ளோம் என தெரிவித்துள்ளார். தினசரி கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்திற்கு கீழும், இறப்பு எண்ணிக்கை ஒரு சதவிகிதத்திற்கு கீழே வரும் வரை இந்த ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் என அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!