முழு ஊரடங்கு அமல், பள்ளி & கல்லூரிகள் மூடல் – மாவட்ட நிர்வாகம் உத்தரவு! வன்முறை எதிரொலி!
ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அமராவதியில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக அந்நகரத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
முழு ஊரடங்கு
கடந்த ஏப்ரல்.17ம் தேதியன்று ஆந்திர பிரதேசத்தின், அமராவதி மாவட்டத்தில் நிகழ்ந்த மதக் கலவரம் வன்முறையாக மாறி இருக்கிறது. அதாவது, அமராவதி மாவட்டத்தில் உள்ள அச்சல்பூரில் மதக் கொடிகளை அகற்றியதற்காக இரு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் கற்களை வீசித் தாக்கியதையடுத்து, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அந்த வன்முறையை தடுத்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் நடவடிக்கையாக தற்போது முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ATM கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!
அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்திற்குப் பிறகு இரு குழுக்களைச் சேர்ந்த வன்முறையில் ஈடுபட்ட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஷஷிகாந்த் சதவ் தெரிவித்துள்ளார். இப்போது முழு ஊரடங்கு உத்தரவு நேரங்களில் அநாவசியமான மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான தேர்வுகளையும் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 13 நாட்கள் மட்டுமே கோடை விடுமுறை – அமைச்சர் திடீர் உத்தரவு!
அமராவதி மாவட்டத் தலைமையகத்திலிருந்து 48 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அச்சல்பூரின் பிரதான நுழைவாயிலில் உள்ள கிட்கி கேட் மற்றும் துல்ஹா கேட் ஆகியவற்றில், வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பண்டிகைகளின் போது மதக் கொடிகளை வைப்பது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் கொடிகளை வைக்க அதை சில சமூக விரோதிகள் அகற்றியதை அடுத்து கலவரம் உருவானது என்றும், இருப்பினும் SRPF (மாநில ரிசர்வ் போலீஸ் படை) மற்றும் உள்ளூர் போலீசார் சரியான நேரத்தில் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.