தமிழகத்தில் பிப்ரவரி மாதம் ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் முக்கிய ஆலோசனை!!
தமிழகத்தில் ஜனவரி 31ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில் அடுத்தகட்ட தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வரும் ஜனவரி 29ம் தேதி மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு:
கொரோனா தொற்று அச்சம் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த வருட மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் கடுமையான விதிமுறைகளுடன் பின்பற்றபட்ட ஊரடங்கு நாளடைவில் தொற்று எண்ணிக்கை குறைந்த காரணத்தால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டன. கடந்த டிசம்பர் மாதம் இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகளும், ஜனவரி 19 முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகளும் தொடங்கியது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு ஜனவரி 31ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது.
உயர்கல்வி நிறுவனங்களில் சர்வதேச சிறப்பு மையங்கள் திறக்க வேண்டும் – யுஜிசி அறிக்கை!!
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நோய்த்தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் காரணத்தால் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் ஜனவரி 29ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆன்லைன் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் – அண்ணா பல்கலை வெளியீடு!!
இதில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வழங்குவது, 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு மற்றும் 1 மற்றும் 2ம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பு என பலவற்றையும் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இதன் முடிவில் முதல்வர் அவர்கள் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கை பிப்ரவரி மாதம் நீட்டிப்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் அதற்கான ஏற்பாடுகளும் வேகமாக நடைபெற்று வருவதால் அதற்கான நெறிமுறைகளை வகுப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்