மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – அரசு அதிரடி உத்தரவு!

0
மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு - அரசு அதிரடி உத்தரவு!
மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – அரசு அதிரடி உத்தரவு!

இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்துள்ளது. ஆனால் அண்டை நாடான சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டு வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த ஊரடங்கு மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என்று அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

முழு ஊரடங்கு

இந்தியாவில் தென்னாப்பிரிக்காவில் உருவான கொரோனா வைரஸின் புதிய வகையான “ஓமைக்ரான்” வைரஸ் காரணமாக கொரோனாவின் 3ம் அலையின் தாக்கம் பரவத் தொடங்கியது. மேலும் ஓமைக்ரான் வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்படி தற்போது கொரோனா பரவலின் 3ம் அலை கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. ஆனால் அண்டை நாடான சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபி யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!

இங்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனாவின் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி இங்கு கொரோனா பரவலின் 4ம் அலை பரவத் தொடங்கியுள்ளதை உணர முடிகிறது. அத்துடன் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக சாங்சுன், ஜலின் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது நாட்டின் பெரிய நகரமான ஷாங்காயில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் இந்நகரில் ஏப்ரல் 5ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளிவர வேண்டும். அத்துடன் அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் செல்ல பிராணிகளுடன் நடைப்பயிற்சி மேற்கொள்ள தடை விதித்துள்ளது. பொது மக்கள் கட்டடங்களின் லாபிகளிலும் நிற்கவும் தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்றுடன் முடிந்த நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. அதனால் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் மறு உத்தரவு வரும் அமலில் இருக்கும் என்று சீன அரசாங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!