மே 1 முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு? மாநில அரசு திட்டம்!
அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்றை கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முழு ஊரடங்கு:
மஹாராஷ்டிரா மாநிலத்தில் பெருகி வரும் நோய்த்தொற்று காரணமாக ஒவ்வொரு நாளும் 75 ஆயிரம் வரை புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்படுகிறது. பலி எண்ணிக்கையும் சராசரியாக உயர்ந்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக தினமும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. அங்கு நோய்த்தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்குடன், வார இறுதி நாட்களில் பொது முடக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் பொது முடக்க கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இது குறித்து மாநில நிவாரண மற்றும் மறுவாழ்வு அமைச்சர் விஜய் வதேட்டிவார் தெரிவிக்கையில், ‘மஹாராஷ்டிரா மாநிலத்தில் தீவிரமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், கொரோனா தொற்று பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 8.83% கொரோனா தடுப்பூசி வீண் – இந்திய அளவில் முதலிடம்!!
மேலும் அம்மாநிலத்தில் 30000 முதல் 40000 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்படும் வரையும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பரிசோதனை, நோய் தடுப்பு கட்டுப்பாடுகள், தடுப்பூசிகள் அனைத்து நடவடிக்கைகள் மூலமாக இன்னும் ஒரு சில நாட்களில் தொற்று கட்டுக்குள் வரும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மஹாராஷ்டிராவில் தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் மே 1 வரை அமலில் இருப்பதால், மேலும் 15 நாட்கள் கட்டுப்பாடுகளை நீட்டிக்க மாநில அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.