தமிழகத்தில் மார்ச் 2ம் தேதி உள்ளுர் விடுமுறை – பொதுமக்கள் கோரிக்கை!
கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுமா? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மேலும் திருவிழா நிகழ்வுகளில் பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள திருத்தலங்களில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் கலந்து கொள்ள வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிவர். அதனால் அன்றைய தினம் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறையை அறிவிப்பர். அந்த வகையில் கோவை நகரின் காவல் தெய்வமாக விளங்கிவரும் கோனியம்மன் கோயிலில் மாசி தேர் திருவிழா தேரோட்ட விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
TNPSC கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு – ரூ.56,100 முதல் மாத சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
அதன்படி நடப்பு ஆண்டுக்கான தேரோட்ட விழாவின் முகூர்த்தக்கால் நிகழ்ச்சி இன்று (பிப்.14) நடைபெற்றது. அதனை தொடர்ந்து நாளை இரவு 7.30 முதல், 9.00 மணிக்குள் பூச்சாட்டு விழா நடைபெறவுள்ளது. பிப்ரவரி 23ல் இருந்து, 28 வரை தினமும் ஒரு வாகனத்தில் அம்மன் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். திருவிழாவின் முக்கிய நிகழ்வான ல் திருக்கல்யாண உற்சவம் மார்ச்1ம் தேதியும் நடைபெறும். மார்ச் 2ம் தேதி மதியம் 2 மணிக்கு மேல் தேரோட்ட நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற உள்ளது.
பள்ளிகளுக்கு பிப்.16ம் தேதி விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு! மாணவர்கள் குஷி!
இறுதி நிகழ்வாக மார்ச் 7ம் தேதி வசந்த விழா நடைபெறும். இந்த திருவிழாவின் தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு இந்த ஆண்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, பக்தர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. தற்போது கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தேரோட்ட நிகழ்ச்சியில் வெளிமாவட்ட மக்கள் பங்கேற்கக் கூடாது என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.