தமிழகத்தின் இம்மாவட்டத்தில் ஜூலை 6ம் தேதி உள்ளூர் விடுமுறை – அரசுக்கு கோரிக்கை!

0
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் ஜூலை 6ம் தேதி உள்ளூர் விடுமுறை - அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் ஜூலை 6ம் தேதி உள்ளூர் விடுமுறை - அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் ஜூலை 6ம் தேதி உள்ளூர் விடுமுறை – அரசுக்கு கோரிக்கை!

தமிழகத்தில் தற்போது அனைத்து கோவில் திருவிழாக்களும் வழக்கம் போல கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வருகிற ஜூலை 6ம் தேதி அன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதனால் பொதுமக்கள் இதில் கலந்து கொள்ள ஏதுவாக அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்

உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து வழிபாட்டு தலங்களிலும் திருவிழாக்கள் நடத்தப்படவில்லை. இதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அனைத்து கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது 2 வருடங்களுக்கு பிறகு அனைத்து மாவட்டத்திலும் உள்ள வழிபாட்டு தலங்களிலும் வழக்கம் போல கோவில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பல வருடங்களாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ளது.

Exams Daily Mobile App Download

அதனால் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அரசு இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 450 ஆண்டுகளுக்கு பிறகு திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வருகிற ஜூலை 6ம் தேதி அன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை காண வெளியூர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை புரிவார்கள். அதன் காரணமாக இங்கு கோவிலை சுற்றி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள ஏதுவாக வருகிற ஜூலை 6ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலா ரமேஷ் அமைச்சர் மனோதங்க ராஜிடம் கோரிக்கை மனுவை கொடுத்துள்ளார். மேலும் இந்த மனுவில் இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடவும் அத்துடன் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திருவட்டார் பஸ் நிலைய சந்திப்பிலிருந்து ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு செல்லும் சாலையின் இரு பக்கங்களிலும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!