டிசம்பர் 5ம் தேதி தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 5 ஆம் தேதி அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றிக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
திருவிழா போன்றவை நடக்கும் போது தமிழகம் முழுவதும் இல்லாமல், குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
PM Kisan Card-ஐ புதுப்பிக்க வேண்டுமா? IOB வங்கியின் புதிய வசதி அறிமுகம்!!
Exams Daily Mobile App Download
குறிப்பாக இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு நிகழ்வுக்கு மட்டும் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். இந்நிலையில் இந்த திருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் டிசம்பர் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 10ஆம் தேதி பணி நாளாக கருதப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.