அரியலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அரியலூர் மாவட்டத்தில் வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி வரதராஜபெருமாள் திருக்கோவிலில் தேரோட்ட திருவிழா நடைபெற இருப்பதால் அன்று ஒரு நாள் மட்டும் அந்த மாவட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான ஒரு தொகுப்பை கீழே பார்ப்போம்.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் சென்ற இரு ஆண்டுகளாக நாட்டில் நிலவி வந்த கொரோனா தொற்றின் காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டு இருந்தது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் ஆன்லைன் மூலமாகவே பாடங்களை நடத்தி வந்தனர். அதனால் மாணவர்களும் வேறு வலி இன்றி நேரடி வகுப்புகளுக்கு செல்லாமல் தவித்து வந்தனர். மேலும் அதனை தொடர்ந்து மாநிலத்தில் உள்ள எல்லா ஊர்களிலும் எந்த திருவிழாக்களும் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா பரவல் சற்று குறைந்த காரணத்தால் மீண்டும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம் – கொரோனா தொற்றை தடுக்க அரசு அதிரடி உத்தரவு!
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள தென்னகத்தின் சின்னத் திருப்பதி என்று அழைக்கப்படும் அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயிலின் பத்து நாள் திருவிழா கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் அமோகமாக தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வருகின்ற 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனால் அன்று ஒரு நாள் அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்க இருப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்து உள்ளார்.
நாட்டில் மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி அறிவிப்பு!
மேலும் இந்த விடுமுறையை ஈடுகட்ட அடுத்த மாதம் மே 7ஆம் தேதி அன்று முழு வேலை நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை என்று கூறப்பட்டு உள்ளது. அடுத்தாக, தமிழ்நாடு அரசு பள்ளித்தேர்வுத்துறை சார்பில் நடத்தும் இறுதி வகுப்பு அரசு தேர்வுகளுக்கு இது பொருந்தாது என்றும் கூறியுள்ளனர்.