தமிழகத்தில் மார்ச் 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

0
தமிழகத்தில் மார்ச் 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் மார்ச் 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!தமிழகத்தில் மார்ச் 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் மார்ச் 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

திருவாரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தியாகராஜ சுவாமி கோவில் தேர்த்திருவிழா வரும் மார்ச் 15 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. இதனால் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மார்ச் 15 ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

உள்ளூர் விடுமுறை:

திருவாரூரில் அமைந்துள்ள மிகவும் தொன்மையான மற்றும் பிரமாண்டமான கோவில் என்றால் அது தியாகராஜ சுவாமி கோவில் தான். நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக இந்த கோவில் திகழ்ந்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் பஞ்சபூத தலமாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலின் முக்கிய நிகழ்வான ஆழித்தேர் திருவிழா மார்ச் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தேர்திருவிழாவன்று லட்சக்கணக்கான மக்கள் பல ஊர்களில் இருந்து திரண்டு வருவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்றின் காரணமாக எந்த கோவிலும் திறக்கப்படவில்லை.

திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – ஏப்ரல் 1 முதல் பக்தர்களுக்கு அனுமதி!

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோவில் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாகவே இருக்கும். 96 அடி உயரமும் 31 அடி அகலமும் சுமார் 300 டன் எடை கொண்ட இந்த தேர் அலங்கரிக்கப்பட்ட பின்பு 96 அடி உயரமும் 31 அடி அகலமும் சுமார் 300 டன் எடை கொண்டதாகிவிடும். பிப்ரவரி 20 ஆம் தேதி இந்த திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் திருவாரூர் மாவட்டத்திற்கு மட்டும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ப. காயத்ரி கிருஷ்ணன் வரும் மார்ச் 15 ஆம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

TN MRB மருத்துவத் துறையில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு! முழு விபரம் இதோ!

ஆனால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கருவூலங்கள் மற்றும் சார்நிலை கருவூலங்கள் மட்டும் குறைவான பணியாளர்களுடன் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தான் கொரோனா கட்டுக்குள் வர துவங்கியது. இந்த தேர்த்திருவிழா கூட்ட நெரிசலினால் மீண்டும் கொரோனா பரவ அதிகமாக வாய்ப்புள்ளது. இதனால் தியாகராஜ சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணியும்படியும், சமூக இடைவெளியை பின்பற்ற கோரியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!