தமிழகத்தில் ஜூலை 11ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கும் ஜூலை 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் உள்ள புகழ் வாய்ந்த புனிதத்தலங்களில் ஒன்று திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவில். இந்த கோவிலில் ஆண்டு தோறும் தேர் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஜூன் மாத துவக்கத்தில் ஆரம்பித்த நெல்லையப்பர் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா, திரு கால் நாட்டுதல் நிகழ்வுடன் வெகு விமரிசையாக தொடங்கியது. இதை தொடர்ந்து பால் மஞ்சள் அபிஷேகம் கொண்டு மேற்கொள்ளப்படும் சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
Exams Daily Mobile App Download
அடுத்தபடியாக தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்ற நிகழ்ச்சி வரும் ஜூலை மாதம் 3ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து அடுத்த 10 நாட்களுக்கு இந்த திருவிழா நடைபெறும். தொடர்ந்து தேர் இழுக்கும் நிகழ்வு வரும் 11ம் தேதி நடைபெற இருக்கிறது. அந்த வகையில் சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாள் கோயிலின் ஆனி தேர் திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் ஜூலை 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC பயிற்சி மையத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வி.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஜூலை 11ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. என்றாலும், இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது. இந்த நாளில் மாவட்டம் முழுவதும் உள்ள மாவட்ட கருவூலங்கள் மற்றும் துணை கருவூலங்கள் அவசரகால பணிகளை கவனிக்கும் வகையில் குறைந்தபட்ச பணியாளர்களுடன் செயல்படும். தவிர இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் ஜூலை 23ம் தேதி கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் வேலைநாளாக செயல்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.