மாவட்டத்தில் ஜூன் 23ம் தேதி உள்ளூர் விடுமுறை – அரசு உத்தரவு!
பஞ்சாப் மாநிலத்தில், பர்னாலா, சங்ரூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், வாரியங்கள்/கார்ப்பரேஷன்கள் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களுக்கு ஜூன் 23ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உள்ளூர் விடுமுறை:
பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. பஞ்சாப் மாநிலத்தின், 17வது முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றார். மேலும் பஞ்சாப் மாநிலத்தின் 117 சட்டமன்றத் தொகுதிகளில் 92 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி புதிய சாதனை படைத்தது.இந்நிலையில் தற்போது சங்ரூர் மாவட்டத்தில் உள்ள துரி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான பணிகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
பாரதிய ஜனதா கட்சி முன்னாள் காங்கிரஸ் தலைவர் கேவல் சிங் தில்லானையும், ஆம் ஆத்மி கட்சி குர்மெயில் சிங்கையும் வேட்பாளராக நிறுத்தி உள்ளது. இந்நிலையில்,பஞ்சாப் அரசு இது தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இதன்படி எந்த ஒரு அரசு அதிகாரி அல்லது பணியாளர், சங்ரூர், பர்னாலா மாவட்டத்தின் வாக்காளராகவும், மலேர்கோட்லா மாவட்டத்தின் 105-மலேர்கோட்லா சட்டமன்றத் தொகுதியின் வாக்காளராகவும், பஞ்சாப் அரசு அலுவலகங்கள், வாரியங்கள்/கார்ப்பரேஷன்கள் மற்றும் அரசுக் கல்வி நிறுவனங்களில் பணிபுரிபவராகவும் இருந்தால், ஜூன் 23, 2022 அன்று (வியாழன்) அவர் தனது வாக்காளர் அட்டையை சமர்ப்பித்து வாக்களிப்பதற்காக சிறப்பு விடுப்பு எடுக்கலாம்.
அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு – மாநில வாரியான முழு பட்டியல் இதோ!
இந்த விடுப்பு அலுவலர்/ பணியாளர்களின் விடுப்புக் கணக்கில் இருந்து கழிக்கப்படாது. எனவே ஜூன் 23, 2022 அன்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 135-பி இன் துணைப்பிரிவு 1 இன் விதியின்படி, மாவட்டம் சங்ரூர், பர்னாலா மற்றும் மலேர்கோட்லா மாவட்டத்தின் 105-மலேர்கோட்லா சட்டமன்றத் தொகுதியிலும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த ஒரு வணிகம், வர்த்தகம், தொழில்துறை நிறுவனங்கள் அல்லது வேறு எந்த நிறுவனத்திலும் பணிபுரியும் அனைத்து நபர்களையும் பணிபுரிய வற்புறுத்தக்கூடாது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.