தமிழகத்தில் ஜூலை 28 ஆம் தேதி 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் உள்ள முக்கிய மாவட்டங்களுக்கு வருகின்ற ஜூலை 28ம் தேதி உள்ளூர் விடுமுறையை அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. தற்போது அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உள்ளூர் விடுமுறை:
சென்னையில் 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியின் துவக்க விழா வருகிற ஜூலை மாதம் 28 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த சர்வதேச போட்டியில் 188 வெளிநாடுகளில் இருந்து 3000க்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இந்த போட்டியானது நாளை மறுநாள் அதாவது ஜூலை 28ல் தொடங்கப்பட்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதனால் சென்னையில் அதற்கான முன் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் குரங்கு அம்மை ஆய்வகம் அமைக்க நடவடிக்கை – அமைச்சர் விளக்கம்!
இந்த போட்டியில் கலந்து கொள்ள 12 நாடுகளை சேர்ந்த வீரர்கள் தமிழகம் வந்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் நடத்தவில்லை என சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த போட்டியை தங்களது நாடுகளில் நடத்த பல நாடுகள் முன் வந்த நிலையில் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு, இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட்டை நடத்த வேண்டும் என எடுத்த முயற்சி வெற்றி அடைந்தது. அதன் பலனாக இந்தியாவில் குறிப்பாக நமது தமிழகத்தில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது.
Exams Daily Mobile App Download
செஸ் வீரர்கள் வரும் நேரத்தை பொறுத்து ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாமல்லபுரத்தில் பாதுகாப்பிற்காக 4,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து போட்டி துவக்க விழாவான ஜூலை 28 ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. தற்போது இந்த உள்ளூர் அறிவிப்பிற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.