தமிழகத்தில் செப்.15க்குள் உள்ளாட்சி தேர்தல் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!!
தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தினால் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் வருகிற செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல்:
தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அவசியம் ஏற்பட்டது. இதை அடுத்து கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. ஆனால் எதிர்பார்த்த விதமாக தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளாத மாணவர்கள் பட்டியல் – மாநில திட்ட இயக்குனர் உத்தரவு!
இதன் காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது. தற்போது வரையிலும் கொரோனா நோய் பரவலில் இருந்து முழுவதும் மீளாத நிலையில், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று (ஜூன் 21) கூடிய சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநர் அவர்கள் தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தனது உரையில் தெரிவித்தார்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தற்போது இதுகுறித்து உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் தேர்தலை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நடத்த 6 மாதம் அவகாசம் அளிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.