புதுச்சேரியில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வந்த நிலையில், வரும் நவம்பர் மாதம் 3 கட்டங்களாக தேர்தல் நடக்க இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல்:
தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு முதல் கட்டமாக கடந்த 6ம் தேதி தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நாளை இரண்டாம் கட்ட வகுப்பதிவுகள் நடக்க உள்ளது. இதேபோல், புதுச்சேரியிலும் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து கடந்த நாட்களில் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. தற்போது மாநில தேர்தல் ஆணையம் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக அஞ்சல் துறையில் வேலை – 300 க்கும் மேற்பட்ட காலியிடங்கள்!
புதுச்சேரியில் இறுதியாக கடந்த 2006ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பிறகு, பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. தமிழகத்தை போலவே புதுவையிலும், அக்டோபர் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் நடத்தப்பட்டது. இருப்பினும், பல சர்ச்சைகள் தேர்தல் காரணமாக எழுப்பப்பட்டது. இதனால் பழைய தேர்தல் அட்டவணை ரத்து செய்யப்பட்டது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – தீவிரமெடுக்கும் ஆய்வு!
மாநிலத் தேர்தல் ஆணையர் தாமஸ் பி. ராய் தேர்தல் அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி, வரும் நவம்பர் மாதம் 2,7 மற்றும் 13 தேதிகளில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக முறையே அக்டோபர் 11 – 18 வரையும், அக்டோபர் 15- 22ம் தேதி வரையும், அக்டோபர் 22- 29ம் தேதி வரையும் மனு தாக்கல் செய்வதற்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மூன்றுகட்ட வாக்குப்பதிவுகள் முடிந்த பின் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 17-ம் தேதி நடைபெறுகிறது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் 10,03,755 பேர் வாக்களிக்க உள்ளனர் என்று மாநில தேர்தல் ஆணையர் தனது செய்திக் குறிப்பில் அறிவித்துள்ளார்.