பெண்களுக்கான ரூ.25 லட்சம் வரை வழங்கும் கடனுதவி திட்டம்? உண்மையா? முழு விபரங்கள் இதோ!
மத்திய அரசால் பெண்களுக்கென்று பல்வேறு வகையான நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது சமூக வலைத்தளங்களில் ‘பிரதான் மந்திரி நாரி சக்தி யோஜனா’ என்ற திட்டத்தில் பெண்களுக்காக ரூ.2.20 லட்சம் நிதியுதவியும், ரூ.25 லட்சம் கடனுதவியும் வழங்கப்படுகிறது என்ற செய்தி பரவலாக வெளியாகி கொண்டிருக்கின்றனர். தற்போது இந்த திட்டம் உண்மையில் உள்ளதா? இல்லையா? என்பது குறித்து பார்ப்போம்.
கடனுதவி திட்டம்
இந்தியாவில் பெண்களின் நலன் கருதியும் பாதுகாப்பு கருதியும் பல்வேறு வகையான நலத்திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு, பணிபுரியும் பெண்கள் விடுதிகள் சிறப்புத் திட்டம், சகி திட்டம், தொழில் முனைவோர் அபிவிருத்தித் திட்டம், மகிளா இஹாட் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது ‘பிரதான் மந்திரி நாரி சக்தி யோஜனா’ என்ற திட்டம் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Exams Daily Mobile App Download
பிஐபி சார்பாக நடத்தப்பட்ட fact check ஆய்வில் இந்த திட்டம் போலியான திட்டம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் இந்த திட்டத்தில் ரூ.2.20 லட்சம் நிதியுதவியும், ரூ.25 லட்சம் கடனுதவியும் தருவதாக கூறப்பட்டுள்ளது. அதனால் ஏராளமான பெண்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெற முயற்சி செய்தனர். தற்போது இந்த திட்டம் அரசால் அறிமுகப்படுத்தப்படவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் பெண்கள் யாரும் இந்த திட்டத்தை பற்றி நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – மோசடி எச்சரிக்கை! முழு விவரம் இதோ!
இந்த திட்டம் ஒரு யூடியூப் வீடியோ மூலமாகவே பரவியுள்ளது. தங்களுக்கு அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வர வேண்டும் என்று போலியான தகவல்களை பரப்பி வருகின்றனர். மேலும் இது போன்ற தவறான செய்தியை வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதனை யாரும் நம்பாமல் இது போன்ற அரசின் திட்டங்களை குறித்து அரசின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கங்களிலோ அல்லது அது தொடர்பான அதிகாரிகளிடமோ கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.