கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் முதல் குடிநீர் கட்டணம், வீட்டு வாடகை வரை செலுத்த கால அவகாசம் – முதல்வர் அறிவிப்பு..!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் வேலையில்லாததால் வருமானம் இன்றி தவிக்கின்றனர். இந்நிலையில் சொத்துவரி முதல் பல்வேறு தவணைத்தொகைகள் வரை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் விடுமுறை நீட்டிப்பு !!!!
முதல்வரின் அறிவிப்புகள்..!
- தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு.
- உள்ளாட்சி அமைப்புகளில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த 3 மாதங்கள் (ஜூன் 30 வரை) கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
- கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் மாதத்தவணை செலுத்த 3 மாதம் கால அவகாசம்.
- வீட்டு உரிமையாளர்கள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான வீட்டு வாடகை தொகையை 2 மாதங்கள் கழித்து பெற்றுக் கொள்ள வேண்டும்.
- மீனவ மற்றும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன் தொகைக்கான தவணைத்தொகையை செலுத்துவதற்கும் 3 மாதம் கால அவகாசம்.
- மோட்டார் வாகன சட்டப்படி உரிமங்கள் மற்றும் வாகன தகுதிச் சான்றுகள் (FC) புதுப்பிக்க 3 மாதங்கள் கால அவகாசம்.
- சிப்காட் நிறுவனத்திடம் மென்கடன் பெற்றுள்ள தொழில் நிறுவனங்கள் கடன் தொகையை செலுத்த 3 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
- சிப்காட் தொழில் பூங்காவில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் வாடகை தொகையை செலுத்த 3 மாதம் கால அவகாசம்.
கல்லூரி, பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பா..? வெளிவந்த தகவல்கள்..!
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |