ஆந்திர பிரதேசத்தில் ஆகஸ்ட் 16 முதல் நேரடி வகுப்புகள் – வெளியான தகவல்!
ஆந்திர பிரதேசத்தில் கொரோனா புதிய பாதிப்புகள் குறைந்து வருவதால், ஜூன் 12 முதல் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், ஆகஸ்ட் 16 முதல் நேரடி வகுப்புகளை துவங்க அரசு முடிவு செய்துள்ளது.
ஆன்லைன் வகுப்புகள்
நாடு முழுவதும் உருவான கொரோனா பேரலை காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதனிடையே ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்னாக தீவிரித்து வந்த கொரோனா 2 ஆம் அலை காரணமாக பொதுத்தேர்வுகள் உட்பட அனைத்து வகையான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது.
WhatsApp பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மல்ட்டி டிவைஸ் வசதி!!
இதனிடையே தற்போது ஆந்திராவில் கொரோனா புதிய பாதிப்புகள் எண்ணிக்கை குறைந்து வருவதை தொடர்ந்து, 2020-22 ஆம் கல்வியாண்டுக்கான புதிய வகுப்புகளை துவங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி ஜூன் 12 ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிற நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 14 வரை ஆன்லைன் வகுப்புகளை தொடரவும், ஆகஸ்ட் 16 முதல் வழக்கமான வகையில் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை துவங்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
அதனால் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மேற்கொள்ளவேண்டிய ஆயத்த பணிகளை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடித்து பள்ளிகளை தயார் செய்ய ஆந்திர அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரை பாடப்புத்தகங்கள் குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டம் நடத்தப்படும். மேலும் பள்ளிகளில் தரமான கல்வியை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுத்து வருவதாக கல்வி அமைச்சர் ஆதிமுல்கு சுரேஷ் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் புதிய கல்விக் கொள்கையை ஆந்திராவில் செயல்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதாவது புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதால் எந்தப் பள்ளியும் மூடப்படாது எனவும் எந்தவொரு ஆசிரியர் பதவியும் குறைக்கப்படாது என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார். மேலும் ஆந்திர பிரதேசத்தில் இயங்கி வரும் அறக்கட்டளை பள்ளிகளில் தேவையான கூடுதல் அறைகளின் கட்டுமானம், அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் என்றும் அந்த பணிகளுக்கு ரூ.16,000 கோடி பட்ஜெட்டை தயாரிக்குமாறு முதல்வர் அறிவுறுத்தியதாக அமைச்சர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.