தமிழக எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணி விருது, கனவு இல்லம் – முதல்வர் அறிவிப்பு!
தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு இலக்கிய மாமணி விருது விருது வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் அவர்களுக்கு இல்லம் பரிசாக அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலக்கிய மாமணி விருது :
எழுத்தாளர்கள் என்பவர் ஒரு தலைப்பு பற்றிய தனது கருத்துக்களை ஒரு கோர்வையாக வடிவமைத்து மக்களுக்கு புரியும் வகையிலும், அவர்கள் பயன் பெரும் வகையிலும் படைப்பாக்க எழுத்துகளை உருவாக்குபவர் எழுத்தாளர்கள். கருத்துக்களை நன்றாக வெளிப்படுத்தும் விதத்தில் மொழியைப் பயன்படுத்தக்கூடிய திறமையான எழுத்தாளர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த பல்வேறு வகையான முறைகளை பின்பற்றுகின்றனர்.
TN Job “FB Group” Join Now
ஒரு முழுமையான எழுத்தாளர் என்பவர் பொதுவாக எழுதப்பட்ட மொழியில் கலையை உருவாக்குவார் .இவர்களை ஊக்குவிப்பது அவசியமாகும். இவர்களின் படைப்புகளை பெருமைப்படுத்தும் வகையில் அரசு இலக்கிய மாமணி விருது விருதை அறிவித்துள்ளது. எழுத்துக்களில் இலக்கிய நயத்துடன் எழுத்தாளர்களின் படைப்புகள் அமைந்துள்ளது. மேலும் இவர்கள் இலக்கியத்தை வளர்க்கும் வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையில் விருது வழங்கப்படும்.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை நிலவரம்!!
தமிழ் இலக்கியத்திற்கு பெருமை சேர்க்கும் படைப்புகளை உருவாக்கிய திறமையான 3 எழுத்தாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இலக்கிய மாமணி விருது வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் 3 எழுத்தாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என அரசு தெரிவித்துள்ளது. மேலும் இவர்களுக்கு பரிசாக அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் கனவு இல்லம் வழங்கப்படும் எனவும் அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.