தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு – பட்டியலை சேகரிக்கும் கல்வித்துறை!
தமிழகத்தில் ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்களின் விவரங்களை மே 25 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஊக்க ஊதியம்:
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதால் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவியது. இதனை பூர்த்தி செய்ய கோரிக்கைகள் எழுந்த நிலையில் தகுதித்தேர்வை நடத்தி ஆசிரியர்களை தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டது. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் அரசு உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதித் தேர்வை நடத்தியது. அதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது.
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 30 நாட்கள் விடுமுறை – 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு நாளை தொடக்கம்!
அதற்கான விண்ணப்ப பதிவுகளும் நடைபெற்று முடிந்துள்ளது. தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு பள்ளிகளில் ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியானவர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உயர் கல்வியின் அடிப்படையில் ஊதியத்தில் 6 சதவீதம் ஊக்க ஊதியம் வழங்கப்படும். தற்போது நடப்பு ஆண்டிற்கான ஊக்க ஊதிய உயர்வு அளிக்கப்பட உள்ள நிலையில் அரசு ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்து வருகிறது.
Exams Daily Mobile App Download
மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று பணிபுரியும் ஆசிரியர்கள் எந்த மாவட்டத்திற்கு மாறுதல் பணி பெற்றுள்ளார்கள் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். அந்த மாவட்டத்திற்குரிய பெயர், முகவரி என அனைத்து விவரங்களையும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி நிர்வாகம் அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேற்சொன்ன விவரங்களை மே 25ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.