இந்தியாவில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியல் – கனமழை எதிரொலி!

0
இந்தியாவில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியல் - கனமழை எதிரொலி!
இந்தியாவில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியல் - கனமழை எதிரொலி!
இந்தியாவில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியல் – கனமழை எதிரொலி!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் இன்று (ஜூலை 9) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட்

நாடு முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் தற்போது கனமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா மற்றும் ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக, இந்த கனமழை காரணமாக பொருட் சேதங்களும், உயிர் சேதங்களும் அதிகளவு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அடுத்து வரும் சில நாட்களுக்கு நாட்டின் சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதன்படி, தற்போது வரைக்கும் மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. மேலும் குஜராத் மற்றும் டெல்லியின் சில பகுதிகளில் அடுத்து வரும் நாட்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மிக கனமழை பெய்யும் என IMD சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, ஜூலை 11ம் தேதி வரை இம்மாநிலத்தின், கொங்கன் பகுதியில் கனமழை பெய்யும் என்றும் வானிலை நிறுவனம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு உயர்வு – பள்ளிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

அடுத்தபடியாக கர்நாடகா மாநிலத்தின் சில மாவட்டங்களில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஏற்கனவே உடுப்பி மாவட்டத்தின் படகெரே கிராமத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஏராளமான நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. மேலும் கலபுர்கி மாவட்டத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதையடுத்து, மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களுக்கும் ஜூலை 9ம் தேதி விடுமுறை அறிவித்து மாவட்ட துணை ஆணையர் யஷ்வந்த் குருகர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதால், மாநிலத்தின் சில பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல கோவாவில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதையடுத்து, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று (ஜூலை 9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹிமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா, மண்டி, சிர்மௌர் மற்றும் சோலன் மாவட்டங்களுக்கு IMD ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது. தவிர, தெலுங்கானா மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!