தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றோர் கவனத்திற்கு – பிப்.11ம் தேதிக்குள் பட்டியல்!
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்பட்ட 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
நகைக்கடன் தள்ளுபடி பட்டியல்:
தமிழகத்தில் அண்மையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த வகையில் திமுக அரசு பல்வேறு தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. மேலும் தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு சங்ககளில் 5 சவரன் அளவு உள்ள நகைகளை வைத்து நகைக்கடன் வாங்கியவர்களுக்கு, நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் உறுதி அளித்தார். அந்த வகையில் திமுக ஆட்சி பதவி ஏற்றுள்ளதால் , அந்த அறிக்கையை நிறைவேற்றும் விதமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி குறித்து ஆய்வு நடைபெற்றது.
Airtel சிம் பயனர்களுக்கு ஷாக் ரிப்போர்ட் – 2022 இல் மீண்டும் ரீசார்ஜ் கட்டண உயர்வு?
அந்த ஆய்வு முடிவில் பல்வேறு குளறுபடிகள், முறைகேடுகள் நடந்திருப்பதாக தகவல் வெளியானது.மேலும் நகைக்கடன் தள்ளுபடியாகும் என்ற எதிர்பார்ப்பில் முறைகேடுகள் நடந்துள்ளது. எனவே பல்வேறு நிபந்தனைகள் அடிப்படையில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக தகுதியானவர்களின் பட்டியல் தயாரிக்கும் பணிக்கு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்த உத்தரவு அடிப்படையில் துணை பதிவாளர் தலைமையில் செயல்படும் குழு தகுதியுள்ள மற்றும் தகுதியற்ற நபர்கள் பட்டியலை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கும் என குறிப்பிட்டது. இந்நிலையில் கூட்டுறவு சங்கப் பதிவாளர் அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த சுற்றறிக்கையில் ஒரே ரேஷன் அட்டை அல்லது ஒரே ஆதார் எண் மூலமாக ஒன்று அதற்கு மேல் வழங்கப்பட்ட 40 கிராமுக்கு மேல் உள்ள நகைக்கடன்கள் குறித்து இறுதி பட்டியல் தயார் செய்யப்பட வேண்டும். இந்த வகையில் பிப்ரவரி 11 ஆம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்திற்கு , நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியுள்ள மற்றும் தகுதியற்றவர்கள் பட்டியலை அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.