TN TET தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு TET தேர்வு ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதுவரை TET தேர்வெழுதியவர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வில் வெற்றி பெற்று பணிநியமனம் பெற்றவர்களின் எண்ணிக்கை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
TET தேர்வு:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்களை நிரப்ப ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் TET தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி (D.Ed) மற்றும் பி.எட் (B.Ed) படித்தவர்கள் TET தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். TET தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. முதல் தாளை D.Ed படித்தவர்கள் எழுதலாம் மற்றும் இரண்டாம் தாளை B.Ed, M.Ed பயின்றவர்களும் எழுதலாம் மற்றும் B.Ed, M.Ed பட்டப்படிப்பு பயின்றவர்கள் முதல் தாளையும் எழுதலாம்.
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு மீண்டும் DA, DR உயர்வு – 7வது ஊதியக்குழு அறிக்கை!
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக TET தேர்வு நடத்தப்படவில்லை மற்றும் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு TET தேர்வு நடைபெற இருக்கிறது. TET தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 7 ஆம் தேதி வெளியான நிலையில் கடந்த சில ஆண்டுகளை விட இந்தாண்டு எக்கச்சக்கமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. TET தேர்வு ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இதுவரை TET தேர்வை எழுதியுள்ள தேர்வாளர்கள் மற்றும் தேர்வான தேர்வாளர்களின் எண்ணிக்கை விவரங்கள் வெளியாகியுள்ளன.
Exams Daily Mobile App Download
2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட TET முதல் தாளை 3,05,405 தேர்வாளர்கள் எழுதியுள்ளனர். இதில் 1735 தேர்வாளர்கள் தேர்வாகியுள்ளனர். தேர்வான அனைத்து தேர்வாளர்களுக்கும் பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இரண்டாம் தாளை 4,09,121 தேர்வாளர்கள் எழுதியுள்ளனர். இதில் 713 பேர் தேர்வாகி தேர்வானவர்களுக்கு பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே ஆண்டில் அக்டோபர் மாதத்தில் நடத்தப்பட்ட முதல் தாளை 2,78,725 பேர் எழுதியுள்ளனர். இதில் 10,397 பேர் தேர்வாகியுள்ளனர். இரண்டாம் தாளை 3,64,370 பேர் எழுதிய நிலையில் 8,864 பேர் தேர்வாகியுள்ளனர்.